கோவை: கோவை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
கோவை: கோவை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இம்முகாமினை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வின் போது, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா, துணை இயக்குனர் (சுகாதாரம்) செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ நா. கார்த்திக், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, திமுக மகளிர் தொண்டரணி மீனா ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இம்முகாமினை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா, துணை இயக்குனர் (சுகாதாரம்) செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ நா. கார்த்திக், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, திமுக மகளிர் தொண்டரணி மீனா ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.