கோவை: கோவை சூலூர் அருகே ஆட்டோ கொள்ளையர்கள் இரண்டு பேரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை சூலூர் அருகே ஆட்டோ கொள்ளையர்கள் இரண்டு பேரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை, சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையத்தில் வழக்கமான ரோந்து பணியில் சூலூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் மினி லோடு ஆட்டோ ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் அந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுனர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதையடுத்து, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உடன் வந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை (35) மற்றும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(30) என்பதும், இருவரும் சூலூர், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மினி ஆட்டோக்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், திருடப்பட்ட ஆட்டோவில் உள்ள உதிரிபகங்களை தனித்தனியாக பிரித்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சூலூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருடிய 6 மினி ஆட்டோக்கள் காங்கேயம் பாளையம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், காங்கயம்பாளையம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 மினி ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை, சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையத்தில் வழக்கமான ரோந்து பணியில் சூலூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் மினி லோடு ஆட்டோ ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் அந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுனர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதையடுத்து, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உடன் வந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை (35) மற்றும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(30) என்பதும், இருவரும் சூலூர், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மினி ஆட்டோக்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், திருடப்பட்ட ஆட்டோவில் உள்ள உதிரிபகங்களை தனித்தனியாக பிரித்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சூலூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருடிய 6 மினி ஆட்டோக்கள் காங்கேயம் பாளையம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், காங்கயம்பாளையம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 மினி ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.