கோவை மாநகர் பகுதியில் உள்ள 20 காவல் நிலையங்களில் இன்று முதல் பெண் காவல் வரவேற்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்..!

கோவை: கோவை மாநகர் பகுதியில் உள்ள 20 காவல் நிலையங்களில் புகார்களை பெற்று உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கும் வகையில், இன்று முதல் பெண் காவல் வரவேற்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.



கோவை: கோவை மாநகர் பகுதியில் உள்ள 20 காவல் நிலையங்களில் புகார்களை பெற்று உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கும் வகையில், இன்று முதல் பெண் காவல் வரவேற்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

கோவை மாநகர் பகுதியில் உள்ள 15 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 3 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் 2 போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையங்களில் இன்று முதல் சுழட்சி முறையில் பெண் காவல் வரவேற்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காலை 7 மணி முதல் 2 வரையும், 2 மணி முதல் 9 மணி வரை பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொண்டு பிரச்சனையை உள்வாங்கி புகார்களை பெறுகின்றனர். இதற்கான 18 லேப்டாப்புகள் வழங்கப்பட்டு, தினமும் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் அனுப்புகின்றனர்.



பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள ஏதுவாக வரவேற்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள 40 பெண் காவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.



காவல் துறையினர் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடையே இனக்கமான உறவை ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர காவல் துறையில் ஆணையர் தீபக்தமோர் உத்தரவின் பேரில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...