கோவை: வால்பாறை பகுதியில் உள்ள குமரன் சாலையில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதால், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை: வால்பாறை பகுதியில் உள்ள குமரன் சாலையில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதால், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரு வழி சாலை மட்டுமே உள்ள நிலையில், சுமார் 2 மணி அளவில் வால்பாறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி சிலை பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்த பேருந்தும் காந்தி சிலை பேருந்து நிலையத்திலிருந்து எஸ்டேட் பகுதிக்கு செல்வதற்காக வந்த பேருந்தும் குமரன் சாலையில் வழி கொடுக்க முடியாமல் இரண்டு பேருந்தும் உரசிக் கொண்டது.

இதில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு எதுவும் இல்லை.

ஆனாலும், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இருபுறமும் வாகனங்கள் கொட்டும் மழையில் செல்ல வழியின்றி நின்று கொண்டு இருந்ததால், பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். போக்குவரத்து தடை ஏற்பட்டது.
அதன்பின்னர், காவல்துறையினர் வந்து வாகனங்களை தடம் மாற்றி, பேருந்து போக்குவரத்தை சீர் செய்தனர். புதிய பேருந்து டிப்போவில் இருந்து காந்தி சிலை பேருந்து வரை இரு புறங்களும் தங்களது சொந்த வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி வைப்பதாலும் பழைய இரும்பு கடைகள் உள்ள பொருட்களை சாலை ஓரத்தில் போட்டு வைப்பதால் இடம் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்ய அரசு பேருந்து ஓட்டுனர்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரு வழி சாலை மட்டுமே உள்ள நிலையில், சுமார் 2 மணி அளவில் வால்பாறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி சிலை பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்த பேருந்தும் காந்தி சிலை பேருந்து நிலையத்திலிருந்து எஸ்டேட் பகுதிக்கு செல்வதற்காக வந்த பேருந்தும் குமரன் சாலையில் வழி கொடுக்க முடியாமல் இரண்டு பேருந்தும் உரசிக் கொண்டது.
இதில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு எதுவும் இல்லை.
ஆனாலும், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இருபுறமும் வாகனங்கள் கொட்டும் மழையில் செல்ல வழியின்றி நின்று கொண்டு இருந்ததால், பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். போக்குவரத்து தடை ஏற்பட்டது.
அதன்பின்னர், காவல்துறையினர் வந்து வாகனங்களை தடம் மாற்றி, பேருந்து போக்குவரத்தை சீர் செய்தனர். புதிய பேருந்து டிப்போவில் இருந்து காந்தி சிலை பேருந்து வரை இரு புறங்களும் தங்களது சொந்த வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி வைப்பதாலும் பழைய இரும்பு கடைகள் உள்ள பொருட்களை சாலை ஓரத்தில் போட்டு வைப்பதால் இடம் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்ய அரசு பேருந்து ஓட்டுனர்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.