கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூர் பகுதியில் 50 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இன்று இடித்து அகற்றினர்.
கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூர் பகுதியில் 50 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இன்று இடித்து அகற்றினர்.
கோவை மாநகராட்சி சார்பாக நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூர் கோகுலம் காலனி பகுதியில் கிருஷ்ணாம்பதி குளத்திற்குச் செல்லும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 50 வீடுகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி நகர திட்டமிடல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "75 ஆண்டுகளாக கிருஷ்ணாம்பதி குளத்திற்குச் செல்லும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இன்று இடித்து அகற்றப்பட்டன," என்றார்.

வீடுகளை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி சார்பாக நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூர் கோகுலம் காலனி பகுதியில் கிருஷ்ணாம்பதி குளத்திற்குச் செல்லும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 50 வீடுகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி நகர திட்டமிடல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "75 ஆண்டுகளாக கிருஷ்ணாம்பதி குளத்திற்குச் செல்லும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இன்று இடித்து அகற்றப்பட்டன," என்றார்.
வீடுகளை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.