கோவை: கோவை கணபதி பகுதியில் குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை கணபதி பகுதியில் குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை கணபதி பகுதியில் பழைய சத்தி ரோடு பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் செல்ல கூடிய குடிநீர் குழாய் பாதிப்பு ஏற்பட்டது. அதை சரி செய்யாமல் கடந்த 15 நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்தது. பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். குடிநீர் சாலை வழியாக ஆறாகச் சென்று கொண்டிருந்தது.
இதன் பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் சாலையின் மையப்பகுதியில் குழிதோண்டி குடிநீர் குழாயினுடைய இணைப்பை சரி செய்தனர். அதன் பிறகு வேலையை அப்படியே போட்டுவிட்டு சுற்றி கற்களை எடுத்து வைத்து விட்டுச் சென்றனர். மேலும், மண்ணைப் போட்டு மூடி விட்டுச் சென்று விட்டனர்.
இந்த நிலையில், குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்ட சாலையின் மையப்பகுதியில் பெரிய குழிகள் காணப்படுகிறது. அந்தப் பகுதியில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணம் செய்கின்றனர்.
தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் மாலை நேரங்களில் அந்தப் பகுதியில் தெருவிளக்கும் இல்லாததால், குழிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகி காயங்களுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு குடிநீர் குழாயை சரி செய்வதற்காக தோன்றிய பள்ளத்தை உடனே மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை கணபதி பகுதியில் பழைய சத்தி ரோடு பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் செல்ல கூடிய குடிநீர் குழாய் பாதிப்பு ஏற்பட்டது. அதை சரி செய்யாமல் கடந்த 15 நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்தது. பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். குடிநீர் சாலை வழியாக ஆறாகச் சென்று கொண்டிருந்தது.
இதன் பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் சாலையின் மையப்பகுதியில் குழிதோண்டி குடிநீர் குழாயினுடைய இணைப்பை சரி செய்தனர். அதன் பிறகு வேலையை அப்படியே போட்டுவிட்டு சுற்றி கற்களை எடுத்து வைத்து விட்டுச் சென்றனர். மேலும், மண்ணைப் போட்டு மூடி விட்டுச் சென்று விட்டனர்.
இந்த நிலையில், குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்ட சாலையின் மையப்பகுதியில் பெரிய குழிகள் காணப்படுகிறது. அந்தப் பகுதியில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணம் செய்கின்றனர்.
தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் மாலை நேரங்களில் அந்தப் பகுதியில் தெருவிளக்கும் இல்லாததால், குழிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகி காயங்களுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு குடிநீர் குழாயை சரி செய்வதற்காக தோன்றிய பள்ளத்தை உடனே மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.