கோவை: பொள்ளாச்சியில் குப்பை வண்டியில் கபசுரக் குடிநீர் வழங்கிய நகராட்சி நகர் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியில் குப்பை வண்டியில் கபசுரக் குடிநீர் வழங்கிய நகராட்சி நகர் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட விஜயபுரம் பகுதிக்கு கடந்த 10ஆம் தேதி நகராட்சி அதிகாரிகள் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கபசுரக் குடிநீரை நகராட்சி குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு சென்றதால் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வாகனத்தை சிறை பிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகர்நல அலுவலரை தொடர்பு கொண்டு பேசியபோது குடிசைப் பகுதி என்பதால், அவசரத்திற்கு குப்பை வண்டியில் கபசுரக் குடிநீர் அனுப்பி வைத்ததாக, அவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட நகர்நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று விஜயபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் விடம் புகார் மனு அளித்துள்ளனர்.
குடிசைப் பகுதி என்பதால் குப்பை வண்டியில் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது என்று சாதிய கண்ணோட்டத்தோடு நகர்நல அலுவலர் கூறியிருப்பது மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட விஜயபுரம் பகுதிக்கு கடந்த 10ஆம் தேதி நகராட்சி அதிகாரிகள் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கபசுரக் குடிநீரை நகராட்சி குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு சென்றதால் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வாகனத்தை சிறை பிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகர்நல அலுவலரை தொடர்பு கொண்டு பேசியபோது குடிசைப் பகுதி என்பதால், அவசரத்திற்கு குப்பை வண்டியில் கபசுரக் குடிநீர் அனுப்பி வைத்ததாக, அவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட நகர்நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று விஜயபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் விடம் புகார் மனு அளித்துள்ளனர்.
குடிசைப் பகுதி என்பதால் குப்பை வண்டியில் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது என்று சாதிய கண்ணோட்டத்தோடு நகர்நல அலுவலர் கூறியிருப்பது மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.