கோவை: கிணத்துக்கடவு அருகே சம்பளம் பாக்கி வாங்கி வருவதாகச் சென்ற இளம்பெண் மாயமானார். இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார்.
கோவை: கிணத்துக்கடவு அருகே சம்பளம் பாக்கி வாங்கி வருவதாகச் சென்ற இளம்பெண் மாயமானார். இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள குமாரபாளையம் பகுதியில் கணவர் குப்புசாமியுடன் வசித்து வருபவர், சரஸ்வதி(50). இவருடைய இரண்டு பெண்கள் படிப்பை முடித்துவிட்டு பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், இளைய மகள் அருள்பிரியா (வயது 21) ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்த அருள்பிரியா கடந்த 10ஆம் தேதி காலை, தான் பணியாற்றிய கம்பெனியில் சம்பளம் பாக்கி வாங்கி வருவதாக அவரது தந்தை குப்புசாமியிடம் கூறிக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், சம்பளம் வாங்கி வருவதாகச் சென்ற அருள்பிரியா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடியும் அருள்பிரியா கிடைக்காததால் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்று ஜூலை 11-ஆம் தேதி அருள் பிரியாவின் தாயார் சரஸ்வதி, காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் பெற்றோர்களுடன் விசாரணை நடத்தி ஜூலை 11ஆம் தேதி இரவு வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அருள்பிரியாவைத் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள குமாரபாளையம் பகுதியில் கணவர் குப்புசாமியுடன் வசித்து வருபவர், சரஸ்வதி(50). இவருடைய இரண்டு பெண்கள் படிப்பை முடித்துவிட்டு பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், இளைய மகள் அருள்பிரியா (வயது 21) ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்த அருள்பிரியா கடந்த 10ஆம் தேதி காலை, தான் பணியாற்றிய கம்பெனியில் சம்பளம் பாக்கி வாங்கி வருவதாக அவரது தந்தை குப்புசாமியிடம் கூறிக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், சம்பளம் வாங்கி வருவதாகச் சென்ற அருள்பிரியா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடியும் அருள்பிரியா கிடைக்காததால் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்று ஜூலை 11-ஆம் தேதி அருள் பிரியாவின் தாயார் சரஸ்வதி, காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் பெற்றோர்களுடன் விசாரணை நடத்தி ஜூலை 11ஆம் தேதி இரவு வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அருள்பிரியாவைத் தேடி வருகின்றனர்.