கோவை: வால்பாறையில் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.
கோவை: வால்பாறையில் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணத்தினால் அரசு அலுவலகங்கள், காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வழங்க அரசு அறிவுறுத்தல் செய்தது.
கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொது குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பெரும் தொற்று காலம் என்பதால் மக்கள் கூட்டமாக வருவார்கள் என்று கொரோனா தொற்று பரவாமல் இருக்க முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க, அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் காணொளி மூலம் நடைபெறும் என்று அறிவுறுத்தினார்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 11 வட்டாட்சியர் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வால்பாறையில் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு குழு அலுவலர் தலைமையில் வட்டாட்சியர் ராஜன் மற்றும் ஓய்வு ஊதியம் வட்டாட்சியர் முத்து குமார் அவர்கள் முன்னிலையில் 2 மனுக்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார்.

வால்பாறை அருகே ஐயற்பாடி எஸ்டேட் சேர்ந்த மாற்று திறனாளி குமார் என்பவருக்கு வங்கி கடன் வழங்கவும் மாதம் தோறும் ஓய்வு ஊதியம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அதனை உயர்த்தி 1500 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும், அவருக்கு சொந்தமாக வீடு இல்லாமல் உள்ளதால் வீட்டு மனை வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்.
அதேபோல, வாழைத் தோட்டம் பகுதியில் குடியிருக்கும் லைலா பேபி (46) அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணத்தினால் அரசு அலுவலகங்கள், காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வழங்க அரசு அறிவுறுத்தல் செய்தது.
கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொது குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பெரும் தொற்று காலம் என்பதால் மக்கள் கூட்டமாக வருவார்கள் என்று கொரோனா தொற்று பரவாமல் இருக்க முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க, அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் காணொளி மூலம் நடைபெறும் என்று அறிவுறுத்தினார்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 11 வட்டாட்சியர் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வால்பாறையில் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு குழு அலுவலர் தலைமையில் வட்டாட்சியர் ராஜன் மற்றும் ஓய்வு ஊதியம் வட்டாட்சியர் முத்து குமார் அவர்கள் முன்னிலையில் 2 மனுக்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார்.
வால்பாறை அருகே ஐயற்பாடி எஸ்டேட் சேர்ந்த மாற்று திறனாளி குமார் என்பவருக்கு வங்கி கடன் வழங்கவும் மாதம் தோறும் ஓய்வு ஊதியம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.
அதனை உயர்த்தி 1500 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும், அவருக்கு சொந்தமாக வீடு இல்லாமல் உள்ளதால் வீட்டு மனை வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்.
அதேபோல, வாழைத் தோட்டம் பகுதியில் குடியிருக்கும் லைலா பேபி (46) அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வழங்கப்பட்டது.