கோவை: கோவை, சூலூர் அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரது வீட்டில் கடந்த இரண்டு வருடமாக ரவி பிரசாத் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இவர் பெயிண்ட் வேலை செய்பவர். தனது வீட்டில் ரவி பிரசாத் நண்பர்களுடன் சில நாட்களாக தங்கி வந்து உள்ளார்.
இதனையடுத்து, கடந்த 05.07.2021 அன்று ரவி பிரசாத் தனது நண்பர்களுடன், அவரது அறையில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது கேட்ட சத்தத்தில், வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன், ரவி பிரசாத்தின் அறைக்கு வந்து பார்க்கையில் ரவி பிரசாத்தை அவருடன் இருந்த நண்பர்கள் கொலை செய்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், இது குறித்து வெங்கடேசன் அருகில் உள்ள சூலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து கிருஷ்ணகுமார், முனியாண்டி மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியதாக போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரது வீட்டில் கடந்த இரண்டு வருடமாக ரவி பிரசாத் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இவர் பெயிண்ட் வேலை செய்பவர். தனது வீட்டில் ரவி பிரசாத் நண்பர்களுடன் சில நாட்களாக தங்கி வந்து உள்ளார்.
இதனையடுத்து, கடந்த 05.07.2021 அன்று ரவி பிரசாத் தனது நண்பர்களுடன், அவரது அறையில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது கேட்ட சத்தத்தில், வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன், ரவி பிரசாத்தின் அறைக்கு வந்து பார்க்கையில் ரவி பிரசாத்தை அவருடன் இருந்த நண்பர்கள் கொலை செய்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், இது குறித்து வெங்கடேசன் அருகில் உள்ள சூலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து கிருஷ்ணகுமார், முனியாண்டி மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியதாக போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.