பொள்ளாச்சியில் குப்பை வண்டியில் வைத்து கபசுரக் குடிநீர் விநியோகம்... முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்..!

கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட விஜயாபுரம் பகுதி மக்களுக்கு குப்பை வண்டியில் வைத்து கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட விஜயாபுரம் பகுதி மக்களுக்கு குப்பை வண்டியில் வைத்து கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட விஜயபுரம் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த மாதம் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டது.

இந்தநிலையில், நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.

இன்று நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது குப்பை கொண்டு செல்லும் வாகனம் மூலம் கொண்டு வந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



இதையடுத்து, அப்பகுதி மக்கள் குப்பை வண்டியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘‘கொரோனா பெருந்தொற்றில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்த நிலையில், மீண்டும் நோய்த் தொற்று பரவும் வகையில் குப்பை கொண்டு செல்லும் வாகனத்தின் மூலம் கபசுர குடிநீர் வழங்குவது கண்டிக்கத்தக்கது'' என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...