கோவையில் சாலையில் கிடந்த ரூ. 51 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு குவியும் பாராட்டு!

கோவை: கோவை காந்திபுரத்தில் சாலையில் கிடந்த ரூ. 51 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


கோவை: கோவை காந்திபுரத்தில் சாலையில் கிடந்த ரூ. 51 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை வேலாண்டிபாளையம் மருதனார் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஆர்.ஆர் வீதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள சாலையில் கைப்பை ஒன்று கிடைத்தது. இதனை பார்த்த விஜயகுமார் ஆட்டோவை நிறுத்தி விட்டு அந்த பையை எடுத்தார். அதில் பணம், வங்கி புத்தகம் மற்றும் செல்போன் இருந்தது.

பின்னர், அதனை எடுத்துக்கொண்டு விஜயகுமார் காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அந்த செல்போனில் இருந்து போன் வந்தது. அதை எடுத்து விஜயகுமார் பேசினார். அந்த பெண் தனது பெயர் ஸ்ரீ தேவி என்றும் கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள ஆர்.ஆர் வீதியில் இருந்து வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து கைதவறி விழுந்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக அவர் காட்டூர் போலீஸ் நிலையம் வாருங்கள் என கூறினார்.



இதையடுத்து, போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரிடம் போலீசார் அவரது கைப்பையில் இருந்த ரூபாய் 51 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவரின் இந்த செயலை போலீசார் மனதார பாராட்டினர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அனைத்து ஆட்டோ டிரைவர்களும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதால், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மக்கள் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...