பல்லடம் அருகே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 100க்கும் மேற்பட்டோர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!

திருப்பூர்: பல்லடம் அருகே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 100க்கும் மேற்பட்டோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 100க்கும் மேற்பட்டோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலத்திற்கு செல்லும் பாதையை அதே பகுதியில் வசித்து வரும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சுப்பிரமனியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.



இந்த நிலையில், தற்போது மீண்டும் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் அளித்து வருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் தனது நிலத்தில் அத்துமீறி நுழைந்து தனது மனைவியை தாக்கியதாகவும், இது தொடர்பாக தான் புகார் கொடுத்தும் அதனை ஏற்காமல் ஜாதி குறித்து தவறாகப் பேசியதாக தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்கை ரத்து செய்து உள்நோக்கத்துடன் புகார் கொடுத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்பிரமணியம் 100க்கும் மேற்பட்டோருடன் வந்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...