கோவை: கோவையில் பல்வேறு நபர்களிடம் ரூ. 49.50 லட்சம் பெற்று, மோசடி செய்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் பல்வேறு நபர்களிடம் ரூ. 49.50 லட்சம் பெற்று, மோசடி செய்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை கணபதி நேரு நகரை சேர்ந்தவர் மாலதி (52). பொன்னேகவுண்டன்புதுார் அரசு துவக்கப் பள்ளியின் தலைமையாசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் பல்வேறு நபர்களிடம், 2017ம் ஆண்டு மே முதல், 2019ம் ஆண்டு, டிச., வரையிலான காலத்தில், 49.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
ஆனால், கடனை திருப்பி செலுத்தவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது, காசோலைகளை வழங்கினார். ஆனால், வங்கியில் பணம் இல்லை என காசோலைகள் திரும்பி விட்டன. இதுகுறித்து கேட்டபோது மாலதி முறையாக பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, மாலதியிடம், 20 லட்சம் ரூபாய் கொடுத்த, தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் அன்னூர், குரும்பபாளையத்தை சேர்ந்த, கார்த்திக்குமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணையில் மாலதி மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை கணபதி நேரு நகரை சேர்ந்தவர் மாலதி (52). பொன்னேகவுண்டன்புதுார் அரசு துவக்கப் பள்ளியின் தலைமையாசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் பல்வேறு நபர்களிடம், 2017ம் ஆண்டு மே முதல், 2019ம் ஆண்டு, டிச., வரையிலான காலத்தில், 49.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
ஆனால், கடனை திருப்பி செலுத்தவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது, காசோலைகளை வழங்கினார். ஆனால், வங்கியில் பணம் இல்லை என காசோலைகள் திரும்பி விட்டன. இதுகுறித்து கேட்டபோது மாலதி முறையாக பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, மாலதியிடம், 20 லட்சம் ரூபாய் கொடுத்த, தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் அன்னூர், குரும்பபாளையத்தை சேர்ந்த, கார்த்திக்குமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணையில் மாலதி மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.