கோவை: கோவை சூலூர் பகுதியில் வீடு புகுந்து இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு. கஞ்சா வியாபாரி கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த வெறிச்செயல் நடந்துள்ளது.
கோவை: கோவை சூலூர் பகுதியில் வீடு புகுந்து இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு. கஞ்சா வியாபாரி கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த வெறிச்செயல் நடந்துள்ளது.
சூலூர் பள்ளபாளையம் பகுதியில் கடந்த மே மாதம் கஞ்சா வியாபாரிகள் இடையே ஏற்பட்ட மோதலில் சிங்காநல்லூரைச் சேர்ந்த வசந்த் பள்ளபாளையத்தைச் சேர்ந்த மகேஷ் ஆகிய 2 பேரும் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் பாரதி புரத்தைச் சேர்ந்த சரவணன் உட்பட 8 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், கொலை செய்யப்பட்ட வசந்த்தின் அண்ணன் பேச்சிமுத்து தனது தம்பி கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் நேற்று அரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளபாளையம் பாரதிபுரம் பகுதியில் உள்ள சரவணன் வீட்டிற்கு சென்றார்.
அங்கு சாலையோரம் சரவணன் மனைவி ஜெயந்தி(40) அமர்ந்து இருந்தார். அப்போது அவரது தலையில் பேச்சிமுத்து திடீரென அரிவாளால் வெட்டினார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி சத்தம் போட்டு ஓடி பக்கத்து வீட்டில் ஒளிந்து கொண்டார். கொலைவெறியில் விடாமல் துரத்திய பேச்சிமுத்து மீண்டும் ஜெயந்தியை வீடு புகுந்து வெட்டினார். வலி தாங்காமல் ஜெயந்தி அலறி சத்தம் போட்டார். அவர் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பேச்சிமுத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். படுகாயமடைந்த ஜெயந்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
சூலூர் பள்ளபாளையம் பகுதியில் கடந்த மே மாதம் கஞ்சா வியாபாரிகள் இடையே ஏற்பட்ட மோதலில் சிங்காநல்லூரைச் சேர்ந்த வசந்த் பள்ளபாளையத்தைச் சேர்ந்த மகேஷ் ஆகிய 2 பேரும் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் பாரதி புரத்தைச் சேர்ந்த சரவணன் உட்பட 8 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், கொலை செய்யப்பட்ட வசந்த்தின் அண்ணன் பேச்சிமுத்து தனது தம்பி கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் நேற்று அரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளபாளையம் பாரதிபுரம் பகுதியில் உள்ள சரவணன் வீட்டிற்கு சென்றார்.
அங்கு சாலையோரம் சரவணன் மனைவி ஜெயந்தி(40) அமர்ந்து இருந்தார். அப்போது அவரது தலையில் பேச்சிமுத்து திடீரென அரிவாளால் வெட்டினார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி சத்தம் போட்டு ஓடி பக்கத்து வீட்டில் ஒளிந்து கொண்டார். கொலைவெறியில் விடாமல் துரத்திய பேச்சிமுத்து மீண்டும் ஜெயந்தியை வீடு புகுந்து வெட்டினார். வலி தாங்காமல் ஜெயந்தி அலறி சத்தம் போட்டார். அவர் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பேச்சிமுத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். படுகாயமடைந்த ஜெயந்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.