வால்பாறையில் சம்பள பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை: வால்பாறை தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத காரணத்தினால் இன்று தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூட்டமைப்பின் சார்பில் ஹைபாரஸ்ட் தேயிலைத் தோட்ட அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: வால்பாறை தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத காரணத்தினால் இன்று தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூட்டமைப்பின் சார்பில் ஹைபாரஸ்ட் தேயிலைத் தோட்ட அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 50க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்தத் தேயிலை தோட்டங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 30ஆம் தேதியே ஒப்பந்தம் முடிவு பெற்றுவிட்டது. தேயிலைத் தோட்ட நிர்வாகம் இதுவரை தொழிற்சங்கங்களை அழைத்து புதிய ஒப்பந்தம் சம்பந்தமான எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. கடந்த வாரம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவின்படி நிர்வாகம் உடனடியாக தொழிற் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தவறும்பட்சத்தில் எட்டாம் தேதி முதல் ஒவ்வொரு தேயிலைத் தோட்ட நிர்வாக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.



தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத காரணத்தினால் இன்று தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூட்டமைப்பின் சார்பில் ஹைபாரஸ்ட் தேயிலைத் தோட்ட அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுக் குழு தலைவர் வால்பாறை ஹமீது தலைமை தாங்கினார்.



ஆர்ப்பாட்டத்தில் யூ கருப்பையா காங்கிரஸ் சௌந்தரபாண்டியன், எல்.பிஎஃப் வீரமணி, விடுதலைச் சிறுத்தை மோகன், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...