தமிழகத்தில் எத்தனை திருநங்கைகள் உள்ளனர் என்ற கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - பொள்ளாச்சி சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை!

கோவை: தமிழகத்தில் எத்தனை திருநங்கைகள் உள்ளார்கள் என்ற கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் எத்தனை திருநங்கைகள் உள்ளார்கள் என்ற கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திருநங்கைகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தொடங்கி வைத்தார்.



பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் இந்த முகாமில் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதிகள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.



அப்போது, தமிழகத்தில் எத்தனை திருநங்கைகள் உள்ளார்கள் என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், 2009ம் ஆண்டுக்குப் பிறகு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே திருநங்கைகளுக்கு என்ன தேவை என்பதை பூர்த்தி செய்ய முடியும். தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சியில் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

மேலும், திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...