கோவை ஊரகப் பகுதியில் 3 ஆயிரம் படுக்கைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்..!

கோவை: கோவை ஊரகப் பகுதியில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை சமாளிக்க, 3 ஆயிரம் படுக்கைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை ஊரகப் பகுதியில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை சமாளிக்க, 3 ஆயிரம் படுக்கைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையின் போது, சிகிச்சைக்காக கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த படுக்கை வசதிகள் மூன்றாவது அலையை சமாளிக்க தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகவும் பெரிய அளவில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பின் தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்தளவே காணப்படுகிறது. கோவை மாவட்டத்தில் தினமும் 400-க்கும் கீழே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்தநிலையில், கொரோனா இரண்டாவது அலையின் போது மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 241 கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. இது தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

‘‘கொரோனா இரண்டாவது அலையின் போது ஊரக பகுதிகளான சூலூர் வட்டாரத்தில் 21 மையங்களில் 220 படுக்கைகளும், துடியலூர் வட்டாரத்தில் 14 மையங்களில் 458 படுக்கைகளும், மதுக்கரை வட்டாரத்தில் 17 மையங்களில் 360 படுக்கைகளும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 39 மையங்களில் 387 படுக்கைகளும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் 27 மையங்களில் 293 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டன.

காரமடை வட்டாரத்தில் 34 மையங்களில் 81 படுக்கைகளும், எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் 18 மையங்களில் 207 மையங்களும், ஆனைமலை வட்டாரத்தில் 8 மையங்களில் 175 படுக்கைகளும், சுல்தான் பேட்டை வட்டாரத்தில் 21 மையங்களில் 310 படுக்கைகளும், அன்னூர் வட்டாரத்தில் 20 மையங்களில் 127 படுக்கைகளும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் 13 மையங்களில் 241 படுக்கைகளும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் 9 மையங்களில் 142 படுக்கைளும் அமைக்கப்பட்டன.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்தாலும் கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க முன் ஏற்பாடாக இந்த படுக்கை வசதிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.'' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...