கோவை: பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி மீன்கரை சாலை வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, இரட்டை கண்பாலம் அருகே கார்த்திக்கை வழிமறித்த குமரன் நகரைச் சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் வேல்முருகன் என்ற இருவரும், கார்த்திக்கை தாக்கிவிட்டு, அவரின் இருசக்கர வாகனம், வெள்ளி செயின் மற்றும் செல்போனை ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதனையடுத்து, அவர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தைப்பேட்டையில் பதுங்கியிருந்த ஹரிபிரசாத் மற்றும் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி மீன்கரை சாலை வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, இரட்டை கண்பாலம் அருகே கார்த்திக்கை வழிமறித்த குமரன் நகரைச் சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் வேல்முருகன் என்ற இருவரும், கார்த்திக்கை தாக்கிவிட்டு, அவரின் இருசக்கர வாகனம், வெள்ளி செயின் மற்றும் செல்போனை ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதனையடுத்து, அவர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தைப்பேட்டையில் பதுங்கியிருந்த ஹரிபிரசாத் மற்றும் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.