கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனடிப்படையில், கிணத்துக்கடவில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனடிப்படையில், கிணத்துக்கடவில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து கொரோனா பெருந்தொற்று குறையத் தொடங்கிய பின்னர் ஜூலை 5ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் கோவை மாவட்டம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கிணத்துக்கடவு பகுதியில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிணத்துக்கடவில் இருந்து கோவை பொள்ளாச்சி மற்றும் கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேருந்துகள் அதிகளவு இயக்கப்படாததால் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து கொரோனா பெருந்தொற்று குறையத் தொடங்கிய பின்னர் ஜூலை 5ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் கோவை மாவட்டம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கிணத்துக்கடவு பகுதியில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிணத்துக்கடவில் இருந்து கோவை பொள்ளாச்சி மற்றும் கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேருந்துகள் அதிகளவு இயக்கப்படாததால் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.