கோவை: தேன்கனிக்கோட்டையில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும்... வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை: தேன்கனிக்கோட்டையில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும்... வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேன்கனிக்கோட்டையில் உழவர் தினம் முன்னிட்டு, தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் கோணப்பன் தலைமை வகித்தார். இணை செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 1970 முதல், 1980 வரை, இலவச மின்சார போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச மின்சார திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயம் சார்ந்த கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மேற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தேன்கனிக்கோட்டையில் உழவர் தினம் முன்னிட்டு, தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் கோணப்பன் தலைமை வகித்தார். இணை செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 1970 முதல், 1980 வரை, இலவச மின்சார போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச மின்சார திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயம் சார்ந்த கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மேற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.