கோவை: கோவையில் இரண்டு மாத இடைவெளிக்கு பின் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ 13.78 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: கோவையில் இரண்டு மாத இடைவெளிக்கு பின் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.13.78 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2 வது அலை காரணமாக, கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி கோவை மாவட்டத்தின் வடக்கு மண்டலத்தில் உள்ள 158 கடைகளும், தெற்கு மண்டலத்தில் உள்ள 135 கடைகளும் என மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளிலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ. 7 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனையாகும். ஆனால், கோவை மாவட்டத்தில் 55 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், நேற்று ஒரே நாளில் கோவை வடக்கில் 158 கடைகளில் ரூ.7 கோடியே 25 லட்சத்துக்கும், கோவை தெற்கில் 135 மதுக்கடைகள் மூலம் ரூ.6 கோடியே 53 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.13.75 கோடிக்கு மது பாட்டில்கள் விற்பனையானது'' என்றார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2 வது அலை காரணமாக, கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி கோவை மாவட்டத்தின் வடக்கு மண்டலத்தில் உள்ள 158 கடைகளும், தெற்கு மண்டலத்தில் உள்ள 135 கடைகளும் என மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளிலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ. 7 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனையாகும். ஆனால், கோவை மாவட்டத்தில் 55 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், நேற்று ஒரே நாளில் கோவை வடக்கில் 158 கடைகளில் ரூ.7 கோடியே 25 லட்சத்துக்கும், கோவை தெற்கில் 135 மதுக்கடைகள் மூலம் ரூ.6 கோடியே 53 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.13.75 கோடிக்கு மது பாட்டில்கள் விற்பனையானது'' என்றார்.