இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டு இருந்ததால், பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
பொள்ளாச்சி: தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு ரூ 4,000 நிவாரணம் மற்றும் மளிகை தொகுப்புவழங்கயது. அதேபோல் கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பொள்ளாச்சியில் உள்ள கிராம புற பூசாரிகள் தங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி 300க்கும் மேற்பட்ட கிராம கோயில் பூசாரிகள் நேற்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டு இருந்ததால், பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இரண்டு மாதங்களாக கிராமப்புற கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கும் அரசு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டு இருந்ததால், பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இரண்டு மாதங்களாக கிராமப்புற கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கும் அரசு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.