கோவை அருகே எண்ணெய் ஆலை இயந்திரத்தில் சிக்கி கை துண்டாகி மூதாட்டி சாவு..!

கோவை: கோவை அருகே எண்ணெய் ஆலையில் வேலை பார்த்தபோது, இயந்திரத்தில் சிக்கி கை துண்டாகியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை அருகே எண்ணெய் ஆலையில் வேலை பார்த்தபோது, இயந்திரத்தில் சிக்கி கை துண்டாகியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை அருகே எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டியின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டாகி மூதாட்டி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ‘‘கோவை மதுக்கரை அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி இவரது மனைவி காளியம்மாள் வயது 60, அதே பகுதியில் கடந்த இரண்டு வருடமாக செக்கு எண்ணெய் ஆலை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காளியம்மாள் வழக்கம்போல ஆலையில் செக்கு எண்ணெய் ஆட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வலது கை செக்கு எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டது. இதில் அவரது கை துண்டானது இதனால் அவர் வலியால் அலறித் துடித்தார். அவரின் சத்தத்தைக் கேட்டு அவரது மகன் முத்துக்குமார் அங்கு ஓடி வந்தார். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...