கோவை அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி..!

கோவை: கோவை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:- ‘‘கோவை சூலூர் அடுத்த செஞ்சேரிமலை செங்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி வயது 61. விவசாயி, இவரது மனைவி நாகம்மாள்(50), இவரது மகன் கருப்பசாமி(20), இவர் அந்தப் பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று வழக்கம் போல பெரியசாமி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கீழே அறுந்து கிடந்த மின்கம்பியை கையால் எடுத்து அகற்றினார். எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் தோட்ட உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது, பெரியசாமி மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து அவர் சுல்தான்பேட்டை போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பெரியசாமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீஸார் 176 சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...