கோவை கோட்டத்தில் 1472 பேருந்துகள் இயக்கம்..!

கோவை: ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவை கோட்டத்தில் இருந்து 1472 அரசு பேருந்துகள் கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்பட்டது.


கோவை: ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவை கோட்டத்தில் இருந்து 1472 அரசு பேருந்துகள் கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மே மாதம் முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பொதுப்போக்குவரத்து சேவைகள் மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து தொடங்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. கோவை கோட்டத்தில் இருந்து 1472 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என கோவை கோட்டத்தில் இருந்து 1472 பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் மட்டும் 535 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் நகர பேருந்துகள் 338, மஃப்சல் பேருந்துகள் 197 இயக்கப்பட்டன. கோவையில் இருந்து மதுரை, திருச்சி, கரூர், சேலம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அனைத்து பேருந்துகளிலும் 50 சதவிகித பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றப்பட்டன. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...