கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக மூன்று இடங்களில் டிஜிட்டல் மழைமானி அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக மூன்று இடங்களில் டிஜிட்டல் மழைமானி அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை தெரிந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் மழைமானி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக மூன்று இடங்களில் டிஜிட்டல் மழைமானி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, கோவையில் நில அதிர்வுகளை அறிந்து கொள்ளும் வகையில் சீஸ்மோகிராப் கருவி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சீஸ்மோ கிராப் கருவியில் பதிவாகும் நில அதிர்வு குறித்த தகவல்களை கோவை நிர்வாகம் கேட்டுப் பெற வேண்டியது உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் தற்போது அன்னூர், கோவை விமான நிலையம், வேளாண்மை பல்கலைக்கழக வளாகம், பெரியநாயக்கன்பாளையம், கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், ஆழியார், பொள்ளாச்சி, சூலூர், சின்னக்கல்லாறு, சின்கோனா, சோலையாறு, வால்பாறை பிஏபி, வால்பாறை தாலுகா ஆகிய இடங்களில் மழைமானி உள்ளது.
இதில் ஒரு சில இடங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் மழைமானி உள்ளது. இதனை தாசில்தார் அலுவலகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக பேரூர், மதுக்கரை, ஆனைமலை ஆகிய இடங்களில் மழைமானி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கு டிஜிட்டல் மழைமானி அமைக்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர நிலநடுக்கம் குறித்து அறிந்து கொள்ள சீஸ்மோகிராப் கருவி கேட்டும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது’’ என்றார்.
கோவை மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை தெரிந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் மழைமானி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக மூன்று இடங்களில் டிஜிட்டல் மழைமானி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, கோவையில் நில அதிர்வுகளை அறிந்து கொள்ளும் வகையில் சீஸ்மோகிராப் கருவி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சீஸ்மோ கிராப் கருவியில் பதிவாகும் நில அதிர்வு குறித்த தகவல்களை கோவை நிர்வாகம் கேட்டுப் பெற வேண்டியது உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் தற்போது அன்னூர், கோவை விமான நிலையம், வேளாண்மை பல்கலைக்கழக வளாகம், பெரியநாயக்கன்பாளையம், கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், ஆழியார், பொள்ளாச்சி, சூலூர், சின்னக்கல்லாறு, சின்கோனா, சோலையாறு, வால்பாறை பிஏபி, வால்பாறை தாலுகா ஆகிய இடங்களில் மழைமானி உள்ளது.
இதில் ஒரு சில இடங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் மழைமானி உள்ளது. இதனை தாசில்தார் அலுவலகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக பேரூர், மதுக்கரை, ஆனைமலை ஆகிய இடங்களில் மழைமானி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கு டிஜிட்டல் மழைமானி அமைக்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர நிலநடுக்கம் குறித்து அறிந்து கொள்ள சீஸ்மோகிராப் கருவி கேட்டும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது’’ என்றார்.