கோவை: வால்பாறையில் நகராட்சி பணியாளர்களுக்கு நான்காம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
கோவை: வால்பாறையில் நகராட்சி பணியாளர்களுக்கு நான்காம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணியாற்றும் 135 பணியாளர்களில் 3 கட்டமாக 100 பேர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று நான்காம் கட்டமாக மீதமுள்ள 35 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. வால்பாறை நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
முன்னதாக, பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு பின்னர் விண்ணப்பம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது.

இந்த முகாமில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ் முன்னிலையில் வால்பாறை நகராட்சியைச் சேர்ந்த அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அம்மா உணவக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணியாற்றும் 135 பணியாளர்களில் 3 கட்டமாக 100 பேர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று நான்காம் கட்டமாக மீதமுள்ள 35 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. வால்பாறை நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
முன்னதாக, பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு பின்னர் விண்ணப்பம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது.
இந்த முகாமில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ் முன்னிலையில் வால்பாறை நகராட்சியைச் சேர்ந்த அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அம்மா உணவக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.