கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினத்தில், நேற்று மாவட்ட மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினத்தில், நேற்று மாவட்ட மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் நோய்த்தொற்றை கட்டுபடுத்த அரசு சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று, மாவட்ட மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பெரியசாமி, கோட்டூர் வட்டார தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் 430க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் குடும்பத்தாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், கோவை மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் நடைபெறும் என்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் நோய்த்தொற்றை கட்டுபடுத்த அரசு சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று, மாவட்ட மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பெரியசாமி, கோட்டூர் வட்டார தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் 430க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் குடும்பத்தாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், கோவை மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் நடைபெறும் என்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.