கோவையில் கஞ்சா விற்பனையில் சம்பந்தபட்ட 4 வாலிபர்கள் கைது

கோவை: கோவை மாவட்டம் மற்றும் கோவை நகர்ப்புறப் பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து, போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் மற்றும் கோவை நகர்ப்புறப் பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து, போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க, மாவட்ட காவல் துறை மற்றும் மாநகர காவல் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இரவு மற்றும் பகல் நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார், போதைப்பொருள் கடத்தி வரும் நபர்களை கைது செய்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று கோவில்பாளையம் அடுத்த கீரணத்தம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கோவில் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் வாகன சோதனை செய்தபோது, வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

அவர்களை மடக்கி விசாரணை செய்ததில், அவர்கள் சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரைச் சேர்ந்த மனோஜ் (21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (25) என தெரியவந்தது. இருவரையும் பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மேலும் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (20) மற்றும் உடையாம்பாளையம் சபரி நகரைச் சேர்ந்த சிவபிரகாஷ் (22)ஆகிய இருவரிடம் மேலும் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து, போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவை கைப் பற்றி, நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...