கோவையில் குளங்களை அழகுப்படுதுதல் என்ற பேரில் உயிர்ச்சூழலுக்கு பெறும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் தலைமையில் ஆய்வு

கோவை: திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் அதன் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் கோவை மாநகர் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு குளங்களில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.


கோவை: திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் அதன் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் கோவை மாநகர் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு குளங்களில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.



ஆய்வில், குளங்களின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குளத்தின் பரப்பளவு பெரிய அளவில் சுருங்கி உள்ளதும், பல இடங்களில் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாகக் குளங்களுக்குள் செலுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"தமிழக முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தேர்தலுக்கு முன்னரே கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட "விடியலை நோக்கி ஸ்டாலின்" பயணத்திலும், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்கிற குறைதீர்ப்பு திட்டத்தின் வழியாகவும், தேர்தல் பிரச்சாரத்திலும் சொல்லப்பட்டதைப் போல, கோவை நகரின் குளங்கள் மற்றும் நீர் வள ஆதாரங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.



இன்று (ஜூலை 2) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணி சார்பாக எனது தலைமையில் கழக சுற்றுச்சூழல் அணி உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கோவையைச் சேர்ந்த அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து கோவையின் முக்கிய குளங்களான வாலாங்குளம், குறிச்சிக்குளம், பெரிய குளம், செல்வபுரம் குளம் மற்றும் தடாகம் குளம் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் குளங்களின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குளத்தின் பரப்பளவு பெரிய அளவில் சுருங்கி உள்ளதும், பல இடங்களில் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாகக் குளங்களுக்குள் செலுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.



மேலும், குளங்களில் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு எதிராக இருக்கும் வகையில் கரைகளுக்கு கான்கிரீட் போடுதல் உள்ளிட்ட தேவையற்ற பணிகளால் குளங்களின் உயிர்ச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கூறியவை, முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் இதனுடன் இன்னும் பல தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன.

கோவையில் உள்ள அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளின் படி, இக்குளங்களை ஆய்வு செய்து, இதன் அறிக்கையை தமிழக முதல்வர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டு குளங்களின் உயிர்ச்சூழல் மற்றும் பல்லுயிர்ப்பெருக்கம் பாதிக்கப்படாத வகையில் திருத்தங்கள் செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது சுற்றுச்சூழல் அணி மாநில துணைச்செயலாளர்கள் மணிசுந்தர், நாராயணமூர்த்தி, உசிலம்பட்டி அருண், செந்தில்குமார், கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...