கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் இரவு நேரங்களில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் இரவு நேரங்களில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில், கோதவாடி பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மரவள்ளி கிழங்கு அறுவடைக்கு தயாராகி வருகிறது.

ஆனால், இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, செடி அடியில் இருக்கும் மரவள்ளிக்கிழங்கை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். எனவே காட்டுப் பன்றிகளால் மரவள்ளி கிழங்கு சாகுபடி பாதிக்கப்படுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில், கோதவாடி பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மரவள்ளி கிழங்கு அறுவடைக்கு தயாராகி வருகிறது.
ஆனால், இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, செடி அடியில் இருக்கும் மரவள்ளிக்கிழங்கை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். எனவே காட்டுப் பன்றிகளால் மரவள்ளி கிழங்கு சாகுபடி பாதிக்கப்படுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.