கோவை கிணத்துக்கடவு அருகே இரவு நேரங்களில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் கவலை!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் இரவு நேரங்களில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் இரவு நேரங்களில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில், கோதவாடி பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மரவள்ளி கிழங்கு அறுவடைக்கு தயாராகி வருகிறது.



ஆனால், இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, செடி அடியில் இருக்கும் மரவள்ளிக்கிழங்கை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.



இதனால் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். எனவே காட்டுப் பன்றிகளால் மரவள்ளி கிழங்கு சாகுபடி பாதிக்கப்படுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...