திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு வரும் சட்டமன்ற நிதி அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்க நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு வரும் சட்டமன்ற நிதி அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்க நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொரோனா தடுப்பு உதவி மையம் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை இன்று மருத்துவமனைக்கு வழங்கிய பின் மருத்துவமனையில் ஆய்வு பணியை மேற்கொண்ட கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்திற்கு என அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு வரும் சட்டமன்ற நிதிநிலை கூட்டத்தொடரிலேயே அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வரும் கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாகவும் தொற்று பாதித்த நேரத்திலும் கடுமையாக பணியாற்றிய முன்கள பணியாளர்களான மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொரோனா தடுப்பு உதவி மையம் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை இன்று மருத்துவமனைக்கு வழங்கிய பின் மருத்துவமனையில் ஆய்வு பணியை மேற்கொண்ட கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்திற்கு என அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு வரும் சட்டமன்ற நிதிநிலை கூட்டத்தொடரிலேயே அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வரும் கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாகவும் தொற்று பாதித்த நேரத்திலும் கடுமையாக பணியாற்றிய முன்கள பணியாளர்களான மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.