கோவை: கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை: கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2021-22ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பாட புத்தகங்களும் வழங்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு முதல் பருவ பாட புத்தகமும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்து பருவ புத்தகங்களும் வழங்கப்படுகிறது.

பள்ளியில் வழங்கப்படும் புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் 2021-22ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பாட புத்தகங்களும் வழங்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு முதல் பருவ பாட புத்தகமும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்து பருவ புத்தகங்களும் வழங்கப்படுகிறது.
பள்ளியில் வழங்கப்படும் புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.