வால்பாறை சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டம்... வாகனங்களை கவனமாக இயக்க வனத்துறை அறிவுறுத்தல்..!

கோவை: வால்பாறை சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால், வாகனங்களை மெதுவாக கவனமாக இயக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.


கோவை: வால்பாறை சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால், வாகனங்களை மெதுவாக கவனமாக இயக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கு விதித்தது. பொது போக்குவரத்துக்கு தடை செய்து வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. வால்பாறை மலைப்பகுதியில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்ல 30 கிலோ மீட்டர் வனப் பகுதியில் சாலை அமைந்துள்ளது. வால்பாறையில் இருந்து ஆழியாறு வரை வனப் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி, காட்டுப் பன்றிகள், சிங்க வால் குரங்கு, வரையாட்டு குரங்குகள் போன்றவை வாழ்ந்து வருகின்றன.



தற்போது ஊரடங்கு காலம் என்பதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து இல்லாமல் உள்ள நிலையில் வனவிலங்குகள் சுதந்திரமாக சாலைகளில் விளையாடி, உணவு தேடி வருகிறது.



வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் அட்டகட்டி, காடம்பாறை பகுதியில் மான், காட்டுப்பன்றி போன்றவை சாலைகளில் பட்டப்பகலில் நடமாடி வருவதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை மெதுவாக இயக்கவும் மிகவும் கவனமாக செல்லுமாறும் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...