கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் இந்தியா மாணவர் சங்கத்தினர் டயர், நொங்கு வண்டிகளை ஓட்டி வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் இந்தியா மாணவர் சங்கத்தினர் டயர், நொங்கு வண்டிகளை ஓட்டி வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து, விலையை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் டயர், நோங்கு வண்டி மற்றும் சைக்கிள்களில் வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவ்வமைப்பினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இம்மாதிரியான இக்கட்டான சூழலில் கூட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்கவில்லை.
ஆனால், தனியார் கார்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.5.4 லட்சம் வரை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை எனவே உடனடியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என தெரிவித்தனர்.