பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் இந்தியா மாணவர் சங்கத்தினர் டயர், நொங்கு வண்டிகளை ஓட்டி வந்து நூதன ஆர்ப்பாட்டம்!

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் இந்தியா மாணவர் சங்கத்தினர் டயர், நொங்கு வண்டிகளை ஓட்டி வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் இந்தியா மாணவர் சங்கத்தினர் டயர், நொங்கு வண்டிகளை ஓட்டி வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.



இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து, விலையை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் டயர், நோங்கு வண்டி மற்றும் சைக்கிள்களில் வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது பேசிய அவ்வமைப்பினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இம்மாதிரியான இக்கட்டான சூழலில் கூட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்கவில்லை.



ஆனால், தனியார் கார்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.5.4 லட்சம் வரை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை எனவே உடனடியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...