திருப்பூர்: திருப்பூர் அருகே முறைகேடாக தடுப்பூசி செலுத்தப்படுவதாக அனைத்து கட்சி சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே முறைகேடாக தடுப்பூசி செலுத்தப்படுவதாக அனைத்து கட்சி சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அடுத்துள்ள மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் முறைகேடாக பிற நபர்களுக்கு மட்டும் செலுத்துவதாகவும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டு முறைகேடாக டோக்கன் விநியோகித்து தடுப்பூசி செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் நெருக்கம் மிகுந்த மங்கலம் ஊராட்சிக்கு குறைவான தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் மக்கள் நெருக்கத்தை கணக்கில் கொண்டு அதிக தடுப்பூசிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் - திருப்பூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த மங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அப்புறப்படுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் செவிலியர்கள் மீது விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் அடுத்துள்ள மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் முறைகேடாக பிற நபர்களுக்கு மட்டும் செலுத்துவதாகவும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டு முறைகேடாக டோக்கன் விநியோகித்து தடுப்பூசி செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் நெருக்கம் மிகுந்த மங்கலம் ஊராட்சிக்கு குறைவான தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் மக்கள் நெருக்கத்தை கணக்கில் கொண்டு அதிக தடுப்பூசிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் - திருப்பூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த மங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அப்புறப்படுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் செவிலியர்கள் மீது விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.