கோவையில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சொட்டு நீர் பாசனம் அமைப்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமாகும். 70 சதவீத பாசன நீரை சேமிப்பது, உடன் ரசாயன உரங்களை நீரில் கலந்து விடுவதால் 50 சதவீத சாகுபடி செலவு குறையும். சிறு குறு விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள மானியத்தில் 100% மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.



இதேபோல், புதிய நுண்நீர் பாசன குழாய்கள் பதிக்க கரும்பு பயிரை தவிர இதர பயிர்களுக்கு பள்ளம் தோண்ட ரூபாய் 3000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற கடந்த ஆறு மாதத்தில் எடுக்கப்பட்ட சிட்டா, நில வரைபடம், புகைப்படங்கள் நீர் மற்றும் மண் பரிசோதனை சான்று ரேஷன் ஆதார் கார்டு கூட்டு வரைபடம் சிறு குறு விவசாயி சான்றுடன் தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், நடப்பாண்டு தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். நடப்பாண்டு தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 150 ஹெக்டேர் பரப்பளவில் திட்டம் செயல்படுத்திட ரூபாய் 104 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....