கோவை: கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்த லட்சக்கணக்கு மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் தென்னைநார் தீயில் கருகி நாசமாயின.
கோவை: கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்த லட்சக்கணக்கு மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் தென்னைநார் தீயில் கருகி நாசமாயின.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள முத்துகவுண்டனூரில் கதிர்வேல் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது.

இந்தத் தென்னை நார் தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தென்னைநார் பிரித்தெடுக்கும் எந்திரத்தில் இருந்து தீ பிடித்துள்ளது, அந்தத் தீ மளமளவென எரிந்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னைநார் மற்றும் தேங்காய் மட்டைகள் மீது பரவி தீப்பிடித்து புகை மூட்டமாகக் காணப்பட்டது. இதையடுத்து தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் கிணத்துகடவு, பொள்ளாச்சி பகுதியில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுமார் நான்கு மணி நேரம் ஆகியும் தொடர்ந்து தீப்பிடித்து வருவதால், அருகில் உள்ள கிணறுகளிலிருந்து லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து தீயணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தீவிபத்தில் லட்சக்கணக்கு மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் தென்னை நார்கள் தீயில் கருகி நாசமானது.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள முத்துகவுண்டனூரில் கதிர்வேல் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது.
இந்தத் தென்னை நார் தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தென்னைநார் பிரித்தெடுக்கும் எந்திரத்தில் இருந்து தீ பிடித்துள்ளது, அந்தத் தீ மளமளவென எரிந்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னைநார் மற்றும் தேங்காய் மட்டைகள் மீது பரவி தீப்பிடித்து புகை மூட்டமாகக் காணப்பட்டது. இதையடுத்து தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் கிணத்துகடவு, பொள்ளாச்சி பகுதியில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சுமார் நான்கு மணி நேரம் ஆகியும் தொடர்ந்து தீப்பிடித்து வருவதால், அருகில் உள்ள கிணறுகளிலிருந்து லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து தீயணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தீவிபத்தில் லட்சக்கணக்கு மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் தென்னை நார்கள் தீயில் கருகி நாசமானது.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.