கோவை: மதுக்கரை பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் கல்லூரி மாணவி சந்தியாவிற்கு ‘கல்பனா சாவ்லா விருது' வழங்கப்பட உள்ளது. சந்தியாவை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வாழ்த்து தெரிவித்தார்.
கோவை: மதுக்கரை பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் கல்லூரி மாணவி சந்தியாவிற்கு ‘கல்பனா சாவ்லா விருது' வழங்கப்பட உள்ளது. சந்தியாவை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வாழ்த்து தெரிவித்தார்.
மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மாவுத்தம்பதி ஊராட்சியில் சின்னாம்பதி எனும் பழங்குடியினர் கிராமம் உள்ளது. மலைவாழ் மக்கள், 82 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் சண்முகத்தின் மகள் சந்தியா, இக்கிராமத்தின் முதல் பட்டதாரி. இவர் கடந்த, 2017ஆம் ஆண்டு முதல் அப்பகுதியைச் சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களைக் கற்றுக்கொடுத்து வருகிறார்.
இவரது பள்ளி செயல்படுவது, தற்போது இவரது குடும்பத்தினர் குடியிருக்க கட்டப்பட்டுவரும் வீட்டில்தான். இதுகுறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதனையறிந்த மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்றார். சந்தியாவிடம் படிப்பு, கற்றுக்கொடுக்கும் ஆர்வம், வீட்டின் கட்டுமான பணி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, திருக்குறள் உள்பட ஐந்து புத்தகங்களை பரிசளித்து வாழ்த்தினார். மேலும், இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று ‘கல்பனா சாவ்லா விருது' வழங்கப்படும் எனவும் கூறிச்சென்றார். சந்தியாவை ஊராட்சித் தலைவர் கோமதி, அவரது கணவர் செந்தில்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.
மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மாவுத்தம்பதி ஊராட்சியில் சின்னாம்பதி எனும் பழங்குடியினர் கிராமம் உள்ளது. மலைவாழ் மக்கள், 82 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் சண்முகத்தின் மகள் சந்தியா, இக்கிராமத்தின் முதல் பட்டதாரி. இவர் கடந்த, 2017ஆம் ஆண்டு முதல் அப்பகுதியைச் சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களைக் கற்றுக்கொடுத்து வருகிறார்.
இவரது பள்ளி செயல்படுவது, தற்போது இவரது குடும்பத்தினர் குடியிருக்க கட்டப்பட்டுவரும் வீட்டில்தான். இதுகுறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதனையறிந்த மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்றார். சந்தியாவிடம் படிப்பு, கற்றுக்கொடுக்கும் ஆர்வம், வீட்டின் கட்டுமான பணி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, திருக்குறள் உள்பட ஐந்து புத்தகங்களை பரிசளித்து வாழ்த்தினார். மேலும், இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று ‘கல்பனா சாவ்லா விருது' வழங்கப்படும் எனவும் கூறிச்சென்றார். சந்தியாவை ஊராட்சித் தலைவர் கோமதி, அவரது கணவர் செந்தில்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.