கோவை: மது விலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 2,577 மதுபாட்டில்களை பொள்ளாச்சி அருகே உள்ள புறம்போக்கு குட்டையில் கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
கோவை: மது விலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 2,577 மதுபாட்டில்கள் பொள்ளாச்சி அருகே உள்ள புறம்போக்கு குட்டையில் கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
கோவை மற்றும் பொள்ளாச்சி அமலாக்கப்பிரிவு (மதுவிலக்கு) போலீசார் 2020ம் ஆண்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை மற்றும் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ய முற்பட்ட மதுபாட்டிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் காவல் நிலையங்களில் வைத்திருந்தனர். இதனை அழிக்க கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று போலீசாரால் கைப்பற்றப்பட்ட 2,577 மதுபாட்டில்களை பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாபுரம் புறம்போக்கு நிலத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், கோட்ட கலால் அலுவலர் சந்திரா முன்னிலையில் குட்டை பகுதியில் கொட்டி அழித்தனர்.

இதனைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.
கோவை மற்றும் பொள்ளாச்சி அமலாக்கப்பிரிவு (மதுவிலக்கு) போலீசார் 2020ம் ஆண்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை மற்றும் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ய முற்பட்ட மதுபாட்டிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் காவல் நிலையங்களில் வைத்திருந்தனர். இதனை அழிக்க கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இன்று போலீசாரால் கைப்பற்றப்பட்ட 2,577 மதுபாட்டில்களை பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாபுரம் புறம்போக்கு நிலத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், கோட்ட கலால் அலுவலர் சந்திரா முன்னிலையில் குட்டை பகுதியில் கொட்டி அழித்தனர்.
இதனைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.