கோவை அன்னூர் அருகே மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது - இரண்டு கார்கள் பறிமுதல்!

கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அருகே மது பாட்டில்கள் கடத்திய இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை, அன்னூர் அருகே மது பாட்டில்கள் கடத்திய இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டம், அன்னுார் அருகே கரியாம்பாளையத்தில் நேற்று எஸ்.ஐ., சிலம்பரசன் தலைமையில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு, மது பாட்டில்களை மாற்றிக் கொண்டிருந்தது. போலீசார் உடனே அவர்களை வளைத்து பிடித்தனர்.

இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் நல்லுாரை சேர்ந்த தினேஷ்குமார்(28), திருப்பூர் மாவட்டம் கோமங்கலத்தை சேர்ந்த டிரைவர் கோபாலகிருஷ்ணன்(35) ஆகிய இருவரும் பிடிபட்டனர். உடுமலையை சேர்ந்த கார் உரிமையாளர் அருண்(40) தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்த விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 467 குவாட்டர் பாட்டில் மது வகைகளை அருண் வாங்கி, தினேஷ்குமாருக்கு கொடுப்பதற்கு காரில் கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, போலீசார் இரண்டு சொகுசு கார்களையும், 467 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அன்னுார் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய அருணை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...