கோவையில் குறுசிறு தொழில்‌ முனைவோர்களிடம்‌ பணியாற்றும்‌ தொழிலாளிகளுக்கு தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கோவை: கோவை மாவட்டத்தில்‌ குறுசிறு தொழில்‌ முனைவோர்களிடம்‌ பணியாற்றும்‌ தொழிலாளிகளுக்கும்‌ தொழில் முனைவோர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உடனடியாக தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில்‌ குறுசிறு தொழில்‌ முனைவோர்களிடம்‌ பணியாற்றும்‌ தொழிலாளிகளுக்கும்‌ தொழில் முனைவோர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உடனடியாக தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எங்கள்‌ TACT சங்கத்தின்‌ சார்பில்‌ கடந்த ஒரு மாதமாக மாவட்ட தொழில்‌ மையத்தின்‌ மூலம்‌ எங்கள்‌ குறுந்தொழில்‌ முனைவோர்களிடம்‌ பணிபுரியும்‌ தொழிலாளிகளுக்கு சங்கத்தின்‌ மூலம்‌ முகாம்‌ நடத்தி தடுப்பூசி போடக் கோரி வரும்‌ சூழ்நிலையில்‌ இன்று வரை வாய்ப்பு கிடைக்கவில்லை.



குறிப்பாக, குறுந்தொழில்‌ முனைவோர்களிடம்‌ 2 பேர்‌ முதல்‌ 10 & 15 வரை பணி புரியும்‌ தொழிலாளிகள்‌ உள்ளனர்‌. அரசு வழிகாட்டல்‌ படி இவர்களுக்கு எங்கள்‌ தொழில்‌ அமைப்பு மூலம்‌ உடனடியாக தடுப்பூசி போட்டு கொள்வதற்கான வாய்ப்பு தங்கள்‌ வழங்கிட வேண்டுகிறேன்‌. முதல்‌ கட்டமாக இடையர்பாளையம்‌, இருகூர், ஆவாரம் பாளையம்‌ பகுதியில்‌ முகாம்‌ நடத்திட ஏற்பாடு செய்து உள்ளோம்.

எனவே, ஒவ்வொரு முகாமிலும்‌ குறைந்தபட்சம்‌ 700 தடுப்பூசிகள்‌ உடனடியாக வழங்கி குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கும்‌, தொழிலாளிகளுக்கும்‌ தடுப்பூசி போடுவதற்கு தங்கள்‌ உதவிட வேண்டுகிறோம்‌. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....