கோவை: வால்பாறையில் கொரோனா நிவாரண பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கப்பட்டுள்ளதா என்று வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
கோவை: வால்பாறையில் கொரோனா நிவாரண பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கப்பட்டுள்ளதா என்று வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று அதிகரித்து வருவதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த தொகை இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. இதில் முதல் தவணையாக 2000 ரூபாயும் மற்றும் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் பணமும், 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு பகுதியிலும் வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 17,636 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், இவர்களுக்கு முறையான சரியான முறையில் கொரோனா நிவாரண தொகை 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்களும் மேலும் ரேஷன் கடைகளில் சரியாக பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறதா என்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய், மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் சரியான முறையில் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா என்று வால்பாறை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

குறிப்பாக, சோலையார், தாய்முடி, நல்லமுடி, முத்து முடி போன்ற எஸ்டேட் ரேஷன் கடைகளில் ஆய்வில் ஈடுபட்டனர். மக்களுக்கு சரியான முறையில் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று அதிகரித்து வருவதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த தொகை இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. இதில் முதல் தவணையாக 2000 ரூபாயும் மற்றும் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் பணமும், 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு பகுதியிலும் வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 17,636 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இவர்களுக்கு முறையான சரியான முறையில் கொரோனா நிவாரண தொகை 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்களும் மேலும் ரேஷன் கடைகளில் சரியாக பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறதா என்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய், மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் சரியான முறையில் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா என்று வால்பாறை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
குறிப்பாக, சோலையார், தாய்முடி, நல்லமுடி, முத்து முடி போன்ற எஸ்டேட் ரேஷன் கடைகளில் ஆய்வில் ஈடுபட்டனர். மக்களுக்கு சரியான முறையில் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.