கோவையின் நீர்நிலைகளைக் காத்திடுக..!

கோவை: கோவையில் குளங்கள், வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிகள் நடந்துவரும் நிலையில், நீர்நிலைகள் சார்ந்து இயங்கி வரும் தன்னார்வ அமைப்புகள் நீர் கரங்கள் கூட்டமைப்பு கோவையின் நீர்நிலைகளைக் காத்திட கோரிக்கை வைத்துள்ளன.


கோவை: கோவையில் குளங்கள், வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிகள் நடந்துவரும் நிலையில், நீர்நிலைகள் சார்ந்து இயங்கி வரும் தன்னார்வ அமைப்புகள் நீர் கரங்கள் கூட்டமைப்பு கோவையின் நீர்நிலைகளைக் காத்திட கோரிக்கை வைத்துள்ளன.

கோவையில் உள்ள நீர்நிலைகளில் பொதுப்பணித்துறை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் குளங்கள் மற்றும் அதன் வாய்க்கால்களை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், அதன் உயிர் சூழல் பாதிக்கப்படும் படியாக கான்கிரீட் தடுப்பு அமைப்பு, கான்கிரீட் கற்களை பதிப்பது போன்ற உயிர் சூழலுக்கு எதிரான பணிகள் நடந்து வருவதால், அதனை கோவையின் நீர்நிலைகள் சார்ந்து இயங்கி வரும் தன்னார்வ அமைப்புகள் நீர் கரங்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்றிணைந்து அதில் திருத்தங்களை மேற்கொள்ள அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

கோரிக்கைகளை முன்வைத்து இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு திட்டங்களில் என்னென்ன உயிர் சூழலுக்கு ஏற்ற மாறுதல்களைக் கொண்டுவரலாம் என்ற விண்ணப்பத்தை கொடுத்திருக்கின்றன.

இதில் சிறுதுளி அமைப்பின் திருமதி வனிதா மோகன், கௌசிகா நதி நீர் கரங்கள் அமைப்பிலிருந்து செல்வராஜ், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டன், CUBE அமைப்பிலிருந்து திருமதி விண்ணி பீட்டர், ராக் அமைப்பு, குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து இந்த கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...