உதகையில் 53 வயது பெண் அடித்துக் கொலை... கொரோனா தொற்றால் அவர் உயிரிழந்தார் என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..!

நீலகிரி: உதகையில் 53 வயது பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


நீலகிரி: உதகையில் 53 வயது பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



உதகையில் இருக்கக்கூடிய கியூ பிரிவு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முஸ்தபா. 55 வயதான இவருக்கும் உதகை அருகே உள்ள காந்தல் புதுநகர் பகுதியைச் சேர்ந்த மாகி என்ற 53 வயதான பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

முஸ்தபா, மாகியை தனியாக வீடு எடுத்து தங்க வைத்திருந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்தநிலையில், இன்று காலை முஸ்தபா, மாகியின் உறவினர்களைத் தொடர்புகொண்டு கொரோனா தாக்கத்தின் காரணமாக மாகி இறந்துவிட்டதாகவும் எனவே, உடலை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறி காரில் கொண்டு சென்று உடலை வழங்கியுள்ளார். வாகனத்தில் இருந்து இறக்கும்போது மாகியின் உடலானது முழுவதும் துணியினால் சுற்றப்பட்டிருந்தது.



இதையடுத்து, உறவினர்கள் மாகியின் உடலை தங்களது வீட்டிற்கு கொண்டு சென்று பார்த்தபோது முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் இருந்தது சந்தேகத்தைத் தூண்டியுள்ளது. தொடர்ந்து மாகியின் உறவினர்கள் உடனடியாக உதகையில் உள்ள ஜி1 காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்ளிட்டோர் ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், உடலை ஒப்படைத்த உதவி ஆய்வாளர் முஸ்தபாவைப் பிடித்து காவல் துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ஏற்கெனவே இவர்கள் இருவருக்கும் தகாத உறவு இருந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உடலை மாகியின் உறவினர்கள் இடையே ஒப்படைக்கும் போது கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இது குறித்து வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் உடனடியாக உடலை அடக்கம் செய்யுமாறும் முஸ்தபா தெரிவித்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...