வால்பாறை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வால்பாறையில் கடையைத் திறந்து கூட்டத்தைக் கூட்டி வியாபாரம் செய்த வியாபாரிக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
வால்பாறை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வால்பாறையில் கடையைத் திறந்து கூட்டத்தைக் கூட்டி வியாபாரம் செய்த வியாபாரிக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கின் காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு மளிகை மற்றும் காய்கறி பழங்களை விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், வால்பாறையில் சில பகுதிகளில் வியாபாரிகள் சிலர் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சிலருக்கு எச்சரிக்கை செய்தும் கூட்டமாக வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், ஒரே பகுதியில் பல வாகனங்களை நிறுத்தி காய்கறி வியாபாரம் செய்ததையும் கண்டு, அவர்களை வெவ்வேறு இடங்களில் வியாபாரம் செய்ய அறுவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் மளிகை, காய்கறி, பழங்கள் வாகன வியாபாரம் செய்யும் வண்டிகள் காலை 10 மணிக்கு மேல் தேயிலைத் தோட்டப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கின் காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு மளிகை மற்றும் காய்கறி பழங்களை விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், வால்பாறையில் சில பகுதிகளில் வியாபாரிகள் சிலர் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சிலருக்கு எச்சரிக்கை செய்தும் கூட்டமாக வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், ஒரே பகுதியில் பல வாகனங்களை நிறுத்தி காய்கறி வியாபாரம் செய்ததையும் கண்டு, அவர்களை வெவ்வேறு இடங்களில் வியாபாரம் செய்ய அறுவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் மளிகை, காய்கறி, பழங்கள் வாகன வியாபாரம் செய்யும் வண்டிகள் காலை 10 மணிக்கு மேல் தேயிலைத் தோட்டப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.