கோவை: கொரோனா தொற்றால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கொரோனா தொற்றால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகேயுள்ள திவான்சாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியன்(65). இவர் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பணியாற்றி வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் நோய் தொற்றால் உயிரிழந்த தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகேயுள்ள திவான்சாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியன்(65). இவர் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பணியாற்றி வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் நோய் தொற்றால் உயிரிழந்த தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.